வணக்கம் வலை நண்பர்களே,
BLOG - வலைப்பூ என்பது கூகிள் தரும் ஓர் இலவச சேவை என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த இலவச சேவைக்கு சிலர் பணம் செலவு செய்து சொந்த முகவரியும் வாங்கியிருப்போம். ஆனாலும் கூகிளின் இலவச டாஷ்போர்ட் உபயோகித்து பதிவுகள் எழுதி வருகிறோம். பதிவுகளை எழுதுபவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு தனித்துவத்தை வைத்திருப்பார்கள். அதனடிப்படையிலே அவர்களின் பதிவுகள் எழுதப்பட்டு இருக்கும். அவரர்களின் பதிவுக்கும் கண்டிப்பாக வாசகர்கள் இருப்பார்கள். அந்த வாசகர்கள் அவரது பதிவை விரும்பி வந்து படிப்பவர்களாகவும் இருக்கலாம், அதே சமயம் பிடிக்கவில்லை என்றாலும் அந்த பதிவு எந்தளவுக்கு மோசமாக எழுதப்பட்டு உள்ளது என அறியவும் படிக்கலாம். எல்லோருக்கும் எல்லா வலைப்பூக்களும் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.