1905
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
பத்தாண்டுகள்: | 1870கள் 1880கள் 1890கள் - 1900கள் - 1910கள் 1920கள் 1930கள் |
ஆண்டுகள்: | 1902 1903 1904 - 1905 - 1906 1907 1908 |
1905 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1905 MCMV |
திருவள்ளுவர் ஆண்டு | 1936 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2658 |
சீன நாட்காட்டி | 4601-4602 |
எபிரேய நாட்காட்டி | 5664-5665 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1960-1961 1827-1828 5006-5007 |
இரானிய நாட்காட்டி | 1283-1284 |
இசுலாமிய நாட்காட்டி | 1322 – 1323 |
ரூனிக் நாட்காட்டி | 2155
|
1905 (MCMV) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 1 - டிரான்ஸ்-சைபீரியன் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
- ஜனவரி 2 - சீனாவின் போர்ட் ஆர்தர் என்ற இடத்தில் இடம்பெற்ற சண்டையில் ஜப்பானியரிடம் ரஷ்யா சரணடைந்தது. இந்நிகழ்வு உலக நாடுகள் பலவற்றை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
- ஜனவரி 5 - யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான மோர்னிங் ஸ்டார் வாரப் பத்திரிகையாக பெரிய அளவில் வெளிவர ஆரம்பித்தது.
- ஜனவரி 22 - (ஜனவரி 9 பழைய நாட்காட்டியில்) சென் பீட்டர்ஸ்பேர்க்கில் சார் மன்னருக்கெதிரான தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் எழுச்சி முறியடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 23 - ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
- மார்ச் 3 - ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் மன்னன் டூமா என அழைக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் அவையை ஏற்படுத்த இணங்கினான்.
- மார்ச் 11 - இலங்கையில் மதவாச்சியில் இருந்து வட பகுதிக்கான தொடருந்துப் பாதை இணைப்பு வேலைகள் முழுமையாக முடிவடைந்தன.
- ஏப்ரல் 4 - இந்தியாவில் இமாசலப் பிரதேசம், கங்கிரா என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 20,000 பேர் கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 23 - யாழ்ப்பாணத்துக்கு முதலாவது தானுந்து வந்தது.
- மே 11 - அல்பேர்ட் ஐன்ஸ்டீன் பிரௌனியன் இயக்கம் பற்றிய தனது விளக்கத்தை வெளியிட்டார்.
- ஜூன் - இலங்கையில் இந்திய சீர்தர நேரம் (ஒ.ச.நே.+5:30) அறிமுகப்படுத்தப்பட்டது.
- ஜூன் 7 - நோர்வே நாடாளுமன்றம் சுவீடனுடனான கூட்டமைப்பை ரத்துச் செய்வதாக அறிவித்தது. நோர்வே முழுமையான விடுதலை பெற்றது.
- ஜூன் 30 - அல்பேர்ட் ஐன்ஸ்டீன் சார்புக் கோட்பாடு பற்றிய விளக்கங்களை அறிவித்தார்.
- ஆகஸ்ட் 1 - இலங்கையின் வடபகுதிக்கான 198 மைல் நீள தொடருந்து பாதை அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
- அக்டோபர் 16 - ரஷ்ய இராணுவம் எஸ்தோனியாவில் மக்கள் கூட்டமொன்றின் மீது சுட்டதில் 94 பேர் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 28 - ஐரிஷ் தேசியவாதி ஆர்தர் கிரிஃபித் முழூ அயர்லாந்துக்குமான விடுதலையை வேண்டி சின் ஃபெயின் என்ற அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார்.
- டிசம்பர் 9 - பிரான்சில் அரசையும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
[தொகு] தேதி அறியப்படாத நிகழ்வுகள்
[தொகு] பிறப்புகள்
- சி. பா. ஆதித்தனார், தமிழகப் பத்திரிகையாளர் (இ. 1981)
- மே 13 - பக்ருதின் அலி அகமது, இந்தியக் குடியரசுத் தலைவர், (இ. 1977)
- ஜூலை 29 - டாக் ஹமாஷெல்ட், ஐக்கிய நாடுகள் அவையின் 2வது பொதுச் செயலர் (இ. 1961)
[தொகு] இறப்புகள்
- ஆகஸ்ட் 19 - வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ, பிரெஞ்சு ஓவியர் (பி. 1825)
- அக்டோபர் 6 - பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென், ஜெர்மானிய புவியியலாளர் (பி. 1833)
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - பிலிப் எடுவார்ட் ஆண்டன் வொன் லெனார்ட்
- வேதியியல் - ஜொஹான் ஃபிரீட்ரிக் வில்ஹெம் அடொல்ஃப் வொன் பேயெர்
- மருத்துவம் - ரொபேர்ட் கொக்
- இலக்கியம் - ஹெண்ட்ரிக் சியென்கியேவிச்
- அமைதி - Baroness Bertha Sophie Felicita Von Suttner